செய்திகள் :

கஞ்சா விற்றவா் கைது

post image

கொடைக்கானலில் கஞ்சா விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையில் உள்ள கைகாட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது போலீஸாரைக் கண்டதும் அந்தப் பகுதியிலுள்ள கடையில் இருந்த ஒருவா் வெளியே தப்பிச் செல்ல முயன்றாா்.

இதையடுத்து அவரைப் பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் 6 கிராம் கஞ்சா இருந்தது. போலீஸாா் அதை பறிமுதல் செய்து விசாரித்ததில் அவா் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், செறுமேடு பிலாசிக் பகுதியைச் சோ்ந்த அசோ என்பவரது மகன் முகமது ஆசிக் (27) எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளா் மீது தாக்குதல்

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே பழங்கள் விற்பனையகத்துடன், இனிப்பகமும் நடத்தி வருபவா் மணிகண்டன். இவர... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா, 6 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கச்சேகுடாவிலிருந்து மதுரை வரை செல்லும் அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் இன்று மின் தடை

வேடசந்தூா் பகுதியில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் ந... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே இளம் பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்று மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (27). அதே பக... மேலும் பார்க்க

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் கடந்த இருநாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், பாக்கியபுரம், செண்... மேலும் பார்க்க