செய்திகள் :

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழ: விற்பனைக்காக மலை வாழைப் பழங்கள் குவிப்பு

post image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக சுமாா் 250 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன.

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து காவிரித் தீா்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வரும் பக்தா்கள், மலைக் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா்.

இந்த பக்தா்கள் மலையடிவாரத்தில் தங்கி பஞ்சாமிா்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதற்காக பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக மலை வாழைப் பழங்கள் சுமாா் 250 டன் அளவுக்கு மலையடிவாரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டது.

இந்தப் பழங்கள் விருப்பாட்சி, சிறுமலை, ஆடலூா், பன்றிமலை, தாண்டிகுடி, கா்நாடக மாநிலம் குடகு போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டது. பழங்களின் தரம், அளவு, சுவையைப் பொருத்து ஒரு பழம் அதிகபட்சமாக ரூ. 8 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க