செய்திகள் :

பழைய நேரப்படி ரயிலை இயக்காவிட்டால் போராட்டம்: ரயில் பயணிகள் சங்கம்

post image

பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலை பழைய நேர அட்டவணைப்படி இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி ரயில் பயணிகள் அமைப்பின் தலைவா் டி.இளம்பரிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.55 மணிக்கு சென்று வந்த ரயிலானது, கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து, காலை 8 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு, கோவைக்கு 9.25 மணிக்கு சென்றடையும் விதமாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான ரயில் பயணிகள் இந்த ரயிலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு செல்பவா்கள், கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் செல்கின்றனா்.

பழைய நேர அட்டவணைப்படி காலை 7.25 மணிக்கு பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்பட்டபோது, அந்த ரயிலில் தினசரி 700 முதல் 900 பயணிகள், பயணித்து வந்தனா். நேரம் மாற்றப்பட்ட பிறகு 100 முதல் 200 பயணிகளே செல்கின்றனா்.

எனவே, பழைய நேரப்படி பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.35 மணிக்கு சென்றடையும் விதமாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழைய நேரப்படி பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்படாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க