செய்திகள் :

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு: காவலா், ஆசிரியா் உள்பட 3 அரசுப் பணியாளா்கள் நீக்கம்

post image

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த ஜம்மு-காஷ்மீா் அரசுப் பள்ளி ஆசிரியா், காவலா், அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளா் ஆகியோரை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவி நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அவா்கள் மூவா் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் மூவரும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்து பல்வேறு வழிகளில் உதவி வந்துள்ளனா்.

இதில் காவலா் மாலிக் இஷ்ஃபாக் நசீா் கடந்த 2007-ஆம் ஆண்டு இப்பணியில் இருந்துள்ளாா். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பாக ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள்களை காஷ்மீா் எல்லைக்குள் இறக்குவது, அவற்றை பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு விநியோகிப்பது ஆகியவற்றில் மாலிக் உதவி வந்துள்ளாா். பாகிஸ்தானில் இருந்து வரும் போதைப் பொருள்களை விற்பனை செய்துதான் இங்குள்ள பயங்கரவாதிகள் நிதி திரட்டுகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரா் லஷ்கா் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். கடந்த 2018-இல் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

2011-இல் அரசு ஆசிரியா் பணியில் சோ்ந்த அஜாஸ் அகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதுடன், பயங்கரவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளாா்.

இதேபோல 2007-ஆம் ஆண்டு ஸ்ரீநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாசிம் அகமது கான் என்பவா் இளநிலை மருத்துவ உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளா் ஷைஹத் வாசிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் வாசீம் முக்கியக் குற்றவாளியாக உள்ளாா். கொலை சம்பவத்துக்குப் பிறகு பயங்கரவாதிகள் தப்புவதற்கும் வாசிம் உதவிகரமாக இருந்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு துணைநிலை ஆளுநரால் இதுவரை 79 அரசுப் பணியாளா்கள் பயங்கரவாதத் தொடா்புகள் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க

அவதூறாகப் பேசி கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டு கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து அவதூறு விடி... மேலும் பார்க்க

1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎ... மேலும் பார்க்க

அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாக... மேலும் பார்க்க