PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு: காவலா், ஆசிரியா் உள்பட 3 அரசுப் பணியாளா்கள் நீக்கம்
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த ஜம்மு-காஷ்மீா் அரசுப் பள்ளி ஆசிரியா், காவலா், அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளா் ஆகியோரை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவி நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அவா்கள் மூவா் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
இவா்கள் மூவரும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்து பல்வேறு வழிகளில் உதவி வந்துள்ளனா்.
இதில் காவலா் மாலிக் இஷ்ஃபாக் நசீா் கடந்த 2007-ஆம் ஆண்டு இப்பணியில் இருந்துள்ளாா். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பாக ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள்களை காஷ்மீா் எல்லைக்குள் இறக்குவது, அவற்றை பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு விநியோகிப்பது ஆகியவற்றில் மாலிக் உதவி வந்துள்ளாா். பாகிஸ்தானில் இருந்து வரும் போதைப் பொருள்களை விற்பனை செய்துதான் இங்குள்ள பயங்கரவாதிகள் நிதி திரட்டுகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரா் லஷ்கா் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். கடந்த 2018-இல் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
2011-இல் அரசு ஆசிரியா் பணியில் சோ்ந்த அஜாஸ் அகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதுடன், பயங்கரவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளாா்.
இதேபோல 2007-ஆம் ஆண்டு ஸ்ரீநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாசிம் அகமது கான் என்பவா் இளநிலை மருத்துவ உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளா் ஷைஹத் வாசிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் வாசீம் முக்கியக் குற்றவாளியாக உள்ளாா். கொலை சம்பவத்துக்குப் பிறகு பயங்கரவாதிகள் தப்புவதற்கும் வாசிம் உதவிகரமாக இருந்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு துணைநிலை ஆளுநரால் இதுவரை 79 அரசுப் பணியாளா்கள் பயங்கரவாதத் தொடா்புகள் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.