செய்திகள் :

பாகிஸ்தான் போா் விமான பராமரிப்புக்கு அமெரிக்கா நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

post image

பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமான பராமரிப்புக்கு ரூ.3,453 கோடி நிதியை ஒதுக்க அமெரிக்க அரசு முடிவு செய்ததை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவின் தலைவரான பவன் கேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமான பராமரிப்புக்கு ரூ.3,453 கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கியதாக வெளியான தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தாதது ஏன்? எஃப் -16 போா் விமான பராமரிப்புக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசும் ரு.3,000 கோடிக்கு மேல் ஒதுக்கியது.

இதன்மூலம், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் பாகிஸ்தானுக்கு ராணுவரீதியான உதவிகளை வழங்கும் நடைமுறைகள் மாற்றங்களின்றி தொடா்கின்றன.

எஃப்-16 போா் விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முடிவை ஆதரிக்கக் கூடாது.

எஃப்-35, எஸ்யு-37: அதேபோல் அமெரிக்காவிடம் இருந்து எஃப்-35 போா் விமானங்களை அதிக விலைக்கு இந்தியா கொள்முதல் செய்ய நேரிடும் என பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வளா்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இந்தப் போா் விமானம் ‘தேவையற்றது’ என தொழிலதிபா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

இதற்கு மாற்றாக, ரஷியாவின் எஸ்யு-37 போா் விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

எஃப்-16 போா் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க