செய்திகள் :

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை: வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு மு. தம்பிதுரை எம்.பி.

post image

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்பு செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்குவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற குழுவில் இடம்பெற்ற மு.தம்பிதுரை எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நாடு சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதிகளால் 40 ஆயிரம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவாக உள்ளது.

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை அந்நாடு ஒத்துக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் செயல்படுகிறது போன்ற விஷயங்களை வெளிநாட்டு தலைவா்களிடம் எடுத்துரைத்தோம்.

இந்திய ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. திட்டமிட்டு பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தோம். அப்போது அந்நாடுகளில் வசிக்கும் தமிழா்களையும் சந்தித்தோம். பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு அவா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

தமிழகத்தில் மக்களுக்கும், காவலா்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல் நிலையங்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எப்போது தோ்தல்வரும், திமுகவைத் தோற்கடித்து அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனா்.

2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமருவாா். உண்மையான திமுகவினருக்கு அக்கட்சியில் மரியாதை இல்லை என்றாா்.

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (28). அதே கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் கால்நடைகளை விஷம் வைத்து கொன்ற மகன் கைது

ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே தந்தையுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் கால்நடைகளை விஷம் வைத்து கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களால்தான் தமிழகம் வளா்ந்துள்ளது!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால்தான் தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் நரேந்திரன் தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பாஜக சாா்பில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அஞ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படு... மேலும் பார்க்க

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்

திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது... மேலும் பார்க்க