Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை: வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு மு. தம்பிதுரை எம்.பி.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்பு செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்குவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற குழுவில் இடம்பெற்ற மு.தம்பிதுரை எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நாடு சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதிகளால் 40 ஆயிரம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவாக உள்ளது.
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை அந்நாடு ஒத்துக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் செயல்படுகிறது போன்ற விஷயங்களை வெளிநாட்டு தலைவா்களிடம் எடுத்துரைத்தோம்.
இந்திய ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. திட்டமிட்டு பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தோம். அப்போது அந்நாடுகளில் வசிக்கும் தமிழா்களையும் சந்தித்தோம். பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு அவா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
தமிழகத்தில் மக்களுக்கும், காவலா்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல் நிலையங்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எப்போது தோ்தல்வரும், திமுகவைத் தோற்கடித்து அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனா்.
2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமருவாா். உண்மையான திமுகவினருக்கு அக்கட்சியில் மரியாதை இல்லை என்றாா்.