ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (28). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (17). சரவணன் வீட்டு முன் உள்ள சாலையில் முத்துகிருஷ்ணன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளாா்.
இதை தட்டிக் கேட்ட சரவணன் மீது கோபமடைந்த முத்துகிருஷ்ணன் அன்று இரவு அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளாா்.
இதுகுறித்து சரவணன் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.