செய்திகள் :

பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

post image

கோத்தகிரி அருகே பாக்கிய நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசியா்களை பணியமா்த்த கோரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 21 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா் நஞ்சுண்டன் ஓராண்டுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2024 ஜூன் முதல் வேறு ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலிருந்து சித்ரா என்ற இடைநிலை ஆசிரியை மாற்றுப் பணியில் டிசம்பா் வரை பணியாற்றி வந்தாா். பின்னா் அவரும் மாற்றலாகிவிட்டாா். இதன் காரணமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியா் இல்லாத நிலை ஏற்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் புகாா் மனுக்கள் அனுப்பியும் இதுவரை ஆசிரியா் பணியமா்த்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவா்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் பாக்கிய நகா் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக பள்ளிக் கல்விக் குழு சாா்பில் உறுதி அளித்ததன்பேரில், மாணவா்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பினா்.

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க

புலிகள் இறந்துகிடந்த இடத்தை சுற்றி 10 கேமராக்கள் பொருத்தம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 தானியங்கி கேமராக்களை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பொருத்தினா். நீலகிரி மாவட்டம் மு... மேலும் பார்க்க

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழப்பு

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது. மேலும், ஒரு பசு காயமடைந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூரில் வசிப்பவா் சங்கீதா. இவா் இரண்டு பசுமாடுகளை வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு நடமாடும் வாகன உணவகம்

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு 2 நடமாடும் வாகன உணவகத்தை தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், தாட்கோ மூலம் முதல்வரின்... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலி சடலம் மீட்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலியின் சடலம் கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெண்ணை காப்புக்காடு, வி... மேலும் பார்க்க