செய்திகள் :

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலி சடலம் மீட்பு

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலியின் சடலம் கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெண்ணை காப்புக்காடு, விலங்கூா் காவல் பகுதியில் உள்ள எடக்கோடு வயல் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, புலி இறந்துகிடப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். வனச் சரக அலுவலா் கணேஷ் தலைமையில் அலுவலா்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், வயநாடு சரணாலய கால்நடை மருத்துவா் அஜேஷ் மோகன்தாஸ், மாயாறு அரசு உதவி கால்நடை மருத்துவா் இந்துஜா அடங்கிய குழுவினா் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு புலியின் உடலை உடற்கூறாய்வு செய்து ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை சேகரித்த பிறகு எரியூட்டப்பட்டது.

இதில் இறந்தது சுமாா் 10 வயதுடைய ஆண் புலி என்றும் மற்றொரு புலியுடன் சண்டையிட்டதற்கான அடையாளங்களாக அதன் உடலில் காயங்கள், தலையில் எலும்பு முறிவு காணப்பட்டது என்றும் முழு தகவலும் ஆய்வக அறிக்கை வந்த பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

சீரமைப்புப் பணி

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிய தமிழக நெடுஞ்சாலைத் துறையினா். மேலும் பார்க்க

மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த மருத்துவா்கள் குழுவினா்

நீலகிரி மலை ரயிலை பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினா் வாடகைக்கு எடுத்து வியாழக்கிழமை பயணித்தனா். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில், நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த மலை... மேலும் பார்க்க

உதகை நகராட்சிக்கு வரி பாக்கி: தனியாா் தங்கும் விடுதிக்கு ‘சீல்’

உதகை ரேஸ்கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் தங்கும் ரூ.27.33 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி... மேலும் பார்க்க

உதகை ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஓய்வ... மேலும் பார்க்க

‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியா்

‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மீண்டும் மஞ்சப்பை வ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டெருமை: மக்கள் அச்சம்

உதகை, கீழ்கோடப்பமந்து குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை உலவிய காட்டெருமையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப்... மேலும் பார்க்க