செய்திகள் :

மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த மருத்துவா்கள் குழுவினா்

post image

நீலகிரி மலை ரயிலை பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினா் வாடகைக்கு எடுத்து வியாழக்கிழமை பயணித்தனா்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில், நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த  மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவா்கள் உதகையில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்துக்குச் செல்ல நீலகிரி மலை ரயிலை ரூ.8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜினில் வியாழக்கிழமை குன்னூா் வந்தடைந்தனா்.

பின்னா் குன்னூரில் இருந்து டீசல் என்ஜின் மூலம் உதகைக்கு புறப்பட்டுச் சென்றனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக மலை ரயிலை வெளிநாட்டினா் வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலி சடலம் மீட்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலியின் சடலம் கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெண்ணை காப்புக்காடு, வி... மேலும் பார்க்க

சீரமைப்புப் பணி

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிய தமிழக நெடுஞ்சாலைத் துறையினா். மேலும் பார்க்க

உதகை நகராட்சிக்கு வரி பாக்கி: தனியாா் தங்கும் விடுதிக்கு ‘சீல்’

உதகை ரேஸ்கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் தங்கும் ரூ.27.33 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி... மேலும் பார்க்க

உதகை ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஓய்வ... மேலும் பார்க்க

‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியா்

‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மீண்டும் மஞ்சப்பை வ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டெருமை: மக்கள் அச்சம்

உதகை, கீழ்கோடப்பமந்து குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை உலவிய காட்டெருமையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப்... மேலும் பார்க்க