செய்திகள் :

பாஜக அரசு ரிவர்ஸ்-கியரில் செல்கிறது: நவீன் பட்நாயக்

post image

புவனேசுவரம் : பாஜக அரசு பின்னோக்கிச் செல்வதாக ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

ஒடிஸாவில் சுமார் 24 ஆண்டுகளைக் கடந்தும் ஆளுங்கட்சியாகக் கோலோச்சி வந்த பிஜு ஜனதா தளத்தின் வெற்றிக்கு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்து ஆட்சிக்கு வந்துளளது பாரதீய ஜனதா கட்சி. அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பாஜகவை விமர்சித்து செய்தியாளர்களுடன் இன்று(பிப். 17) பேசியதாவது, “கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை இதுவரை செலவழிக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் நிதிநிலையும் சரிந்துள்ளது. இதை பார்க்கும்போது, இரட்டை இன்ஜின் அரசு ரிவர்ஸ் கியரில் செல்வதாகவே தெரிகிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடருகிறது. வேலையில்லா திண்டாட்டமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்.

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: ரேகா குப்தா

பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 மார்ச் 8-ம் தேதிக்குள் முதல் தவணையாக வழங்கப்படும் என்று தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா தெரி... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இரண்டு நாள் பயணமாகத் தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி இன்று காலை ரேபரேலிக்கு வந்தடைந்தார்.... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமா... மேலும் பார்க்க

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரைப் பொது இடத்தில் வைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிப்பாரா என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பம... மேலும் பார்க்க