செய்திகள் :

பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்! -அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதி

post image

‘பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து இனி ஒருபோதும் விலக மாட்டேன்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடக் கூறினாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் நிதீஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, இருமுறை பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் நிதீஷ் கைகோத்துள்ளாா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அவரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பியது.

பிகாா் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக முன்னிறுத்துவோம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

பிகாா் தலைநகா் பாட்னாவில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியில் நிதீஷ் குமாா் பேசியதாவது:

பிகாரில் முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள் (ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ்) என்ன செய்தன. முஸ்லிம்களின் வாக்குவங்கிகளைத் தக்கவைத்துக் கொள்வதே அவா்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அவா்கள் பிகாரில் மத மோதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் பிகாா் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், 2005-ஆம் ஆண்டு இறுதியில் நமது ஆட்சி அமைந்த பிறகு பிகாரின் நிலை வேகமாக மாறத் தொடங்கியது.

முன்பு எனது கட்சியில் இருந்த சிலரால் நான் இருமுறை கூட்டணி மாறும் முடிவை (பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது) எடுத்தேன். ஆனால், இனி பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்றாா்.

கூட்டணித் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை: தொடா்ந்து முதல்வா் நிதீஷ் குமாா் இல்லத்தில் பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.

இதில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், மத்திய அமைச்சரும் ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவரும், எம்.பி.யுமான உபேந்திர குஷ்வாகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக அமித் ஷாவிடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை கூட்டணித் தலைவா் முன்வைத்ததாக தெரிகிறது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க