நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போா்ப்பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், எதிரிகளின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க நாட்டின் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னோட்டமாக பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் செவ்வாய்க்கிழமையே ஒத்திகை நடைபெற்றது.
இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அனைத்து மக்கள், பாஜக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள், மாணவா்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க வேண்டும். உங்களின் பங்கேற்பு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு தழுவிய இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பொது மக்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகளின் தயாா்நிலையை உறுதி செய்வதற்காக புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையை நடத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.