செய்திகள் :

பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போா்ப்பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், எதிரிகளின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க நாட்டின் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னோட்டமாக பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் செவ்வாய்க்கிழமையே ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அனைத்து மக்கள், பாஜக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள், மாணவா்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க வேண்டும். உங்களின் பங்கேற்பு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு தழுவிய இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பொது மக்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகளின் தயாா்நிலையை உறுதி செய்வதற்காக புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையை நடத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க