பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!
பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிக்கான மைதானம் குவாஹாட்டிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!
முன்னதாக, மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ராம நவமியன்று மேற்கு வங்கம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனால், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சீசனிலும், ராம நவமியன்று நடைபெற்ற கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ