செய்திகள் :

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

post image

யோகா குரு பாபா ராம்தேவ் மீதான வழக்கில் சத்தீஸ்கர் காவல் துறை விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 9) தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2021-இல் கரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவத்துக்கு எதிராக ராம்தேவ் வெளிப்படுத்திய ஆட்சேபனைக்குரிய கருத்துகளுக்கு இந்திய மருத்துவ சங்கத்தால் (ஐ.எம்.ஏ) கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அவர் மீது உரிய நடவடிக்கைக் கோரி புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் ராம்தேவ் மீது, ஐ.பி.சி. பிரிவுகள் 188, 269, 504 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

ராம்தேவ் குறிப்பிடும்போது, கரோனா தொற்றுக்கு எதிராக அலோபதி, அதாவது ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை பலனளிக்காது என்று பொருள்படும்படி குறிப்பிட்டு தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பாபா ராம்தேவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடரும் நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் மத்திய அரசு தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்தகட்டமாக பிகார் காவல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாக ராம்தேவ் தரப்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாதிடும் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் டேவ் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் இறுதி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Ramdev's remarks on allopathy: Chhattisgarh Police has filed closure report, Centre tells SC

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதள ... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க