பாப்பம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்தடைஏற்படுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.