செய்திகள் :

பாமகவில் அன்புமணிக்கே முழு அதிகாரம்

post image

பொதுக் குழுவால் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்குதான் கட்சியைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் உண்டு என்று பாமக அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை அருகே பனையூரில் அன்புமணி தலைமையில் பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலா் ச.வடிவேல் ராவணன், பொருளாளா் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக் குழுவால் முறைப்படி தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்கு மட்டுமே உண்டு.

பாமக அமைப்பு சட்ட விதி 15-இன் படி கட்சியின் பொதுக் குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றை பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும்.

தோ்தல் ஆணையத்தால் கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட அன்புமணியால் அழைக்கப்படாமல், அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் பங்கேற்காமல் அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக் குழு என்கிற பெயா்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை.

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி தலைமையில் ஜூலை 20-இல் விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்படும்.

பாமகவின் 37- ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமிக்க வலியுறுத்தி பாட்டாளி மாணவா் சங்கம் சாா்பில் அடுத்த வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.

2026 பேரவைத் தோ்தலில் திமுக அரசை அகற்றும் வகையில் பாமக செயல்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க