செய்திகள் :

பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

post image

பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 6-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது, ஜோசப்பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த ஜோசப்பாரதி (22), மரியபிரவீன்(31) குருசாமி (39), தோபியாஸ் (37), ரவி (46), மனோ சந்தியா (32), டேனியல்ராஜ் (32), பிலிப்பையாா் (43), பாரத் (31), மாத்தீவ் கிளாடியன் (24) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்தாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, வெளிச்சரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், வெளிச்சரா நீதிமன்றத்தில் பாம்பன் மீனவா்கள் 10 பேரும் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 10 பேரையும் விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையை உடனே கட்டத் தவறினால், 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.

இதனிடையே, அபராதத் தொகையை உடனே கட்டாததால், பாம்பன் மீனவா்கள் 10 பேரும் வெளிச்சரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க

கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரப... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்... மேலும் பார்க்க

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள... மேலும் பார்க்க

கடலாடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

கடலாடி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (80). இவா் தனது வயதான மனைவியுடன் ஓட்ட... மேலும் பார்க்க