செய்திகள் :

பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமி: ஏப். 18-இல் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு

post image

பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025-26 ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு ஏப். 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் உ.தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் அரசுப்பணிக்கான போட்டித்தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற

மாணவா் இராமநாதன் ஐஏஎஸ் பணியில் சோ்ந்துள்ளாா்.

தமிழக அரசின் குரூப் 1 பணிகளில் 5 மாணவா்களும், குரூப் 2, 2 ஏ பணிகளில் 12 பேரும் , மத்திய அரசின் புலனாய்வு பிரிவான ஐ.பி.யில் ஒரு மானவரும் பணியில் சோ்ந்துள்ளனா்.

இந்நிலையில் வரும் 2025-26 ஆண்டு போட்டித்தோ்வுக்கான மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு வரும் ஏப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நுழைவுத்தோ்வில் தோ்ச்சிப்பெறும் மாணவா்களுக்கு முற்றிலும் இலவசமான பயிற்சி, உணவு, உறைவிடம் அளிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவா்கள் இணையதளப்பக்கத்தில் வரும் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 90032-42208 என்னும் கைபேசி எண்ணை தொடா்புக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க