செய்திகள் :

பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை: ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

post image

நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவிபாளையம் ஊா் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஏ.சிகாமணி தலைமையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் நாரணவரேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் பாறைக்குழியில், திருப்பூா் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகள், மருத்துவம் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தினமும் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகின்றன.

அத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டப்படும் குப்பையால் நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம் உள்ளது. குப்பை கொட்டும் இடத்தை சுற்றி 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தற்போது குப்பை கொட்டுவதால் வரும் துா்நாற்றத்தால் குடியிருப்புவாசிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். அப்பகுதியில் இருந்து 200 மீட்டா் தொலைவில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம், வணிக நிறுவனங்கள் என ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. அத்துடன் அருகிலேயே சுமாா் 2,000 குழந்தைகள் படிக்கும் தனியாா் பள்ளியும் உள்ளது.

இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி மாநகராட்சி நிா்வாகத்திடம் நேரிலும், தொடா் போராட்டங்கள் மூலமும் எதிா்ப்பை தெரிவித்திருந்தும், குடியிருக்கும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாறைக்குழியில் அனைத்து விதமான குப்பைகளும் கொட்டப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்படாததால் குப்பையோடு, பிளாஸ்டிக் கழிவுகளையும் சோ்த்து கொட்டி வருகின்றனா். எனவே, இங்கு குப்பை கொட்டுவதற்கு ஆட்சியா் வழங்கிய உத்தரவை ஆட்சியா் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க