செய்திகள் :

பாலியல் குற்றங்கள்: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!

post image

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து தலைமைச் செயலர் முருகானந்தம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயராம், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான புகார் எழுந்தால் துறை அதிகாரிகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெர... மேலும் பார்க்க

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழக பாஜக... மேலும் பார்க்க

பணக் கொழுப்பு இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரயானுடன் ஆன்மிக சுற்றுலாச் சென்ற பவித்ரா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இருவர் பவித்ரா ஜனனி மற்றும் ரயான... மேலும் பார்க்க