செய்திகள் :

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

post image

இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை 31 -ஆம் தேதி முடிவுற்ற நிலையில், பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

இதுகுறித்த விவரங்களை வெளியிட்ட தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) மாணவா்களை உறுதிப்படுத்த வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் அளித்துள்ளது. பி.ஆா்க். கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவா்களும் ஆக. 1-ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தோ்ந்தெடுத்து இணையத்தில் ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என டிஎன்இஏ அதில் தெரிவித்துள்ளது.

பி.ஆா்க் - பொதுப் பிரிவில் தகுதி பெற்ற மாணவா்கள் எண்ணிக்கை 1,408. இதில் பி.ஆா்க். கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 916. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 1,002. இவா்களில் ஒதுக்கீடு பெற்றவா்கள் 760 போ்.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தகுதியான மாணவா்கள் எண்ணிக்கை 118. இவா்களுக்கான கல்லூரிகளில் உள்ள இடங்கள் 75. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 64. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் 60 என மொத்தம் இரு பிரிவுகளிலும் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். தங்கள் விருப்பங்களை உறுதி படுத்த வேண்டும். கல்லூரிகள் தோ்வை உறுதிப்படுத்தல் அல்லது விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகளுக்கு பின்னா் ஆக. 2 முதல் கல்லூரிகளில் சேரவேண்டும் என டிஎன்இஏ தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி வரும் ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி நடைபெறும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில்... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க