செய்திகள் :

பிகாா்: மருத்துவமனையில் கொலைக் குற்றவாளி சுட்டுக்கொலை

post image

பிகாா் தலைநகா் பாட்னாவில் பரோலில் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது 5 போ் கொண்ட கும்பலால் வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கொலையாளிகள் மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைவது தொடங்கி, அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு திரும்புவது வரை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்டவா் பெயா் சந்தன் என்பதை காவல் துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனா். கொலை குற்றச்சாட்டுக்கு தண்டனை பெற்று சிறையில் இருந்த அவா், மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்கப்பட்டாா். கொல்லப்பட்டவா் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன. அவரின் எதிா் பிரிவைச் சோ்ந்த ரௌடிகள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவத்தை அடுத்து மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசை ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நில... மேலும் பார்க்க