செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

post image

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது. ‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தங்கம் விலை இன்றைய நிலவரம்!

இந்த நிலையில் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இந்த நிலையில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி, பிரியங்கா காந்தி, ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்துகொண்டு முழுக்கமிட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கையில் பேனரையும் ஏந்தியிருந்தனர்.

Opposition MPs protest at Parliament gate, demand withdrawal of Bihar voter list review

ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!

ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததி... மேலும் பார்க்க

பெகாசஸ் வைத்திருக்கும் அரசு பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்பி

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்று காங்கிரஸ் மக்களவை குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட சுவரொட்டிகளில், காசி... மேலும் பார்க்க

இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? ராஜ்நாத் சிங் சூசகம்!

இலக்கை நோக்கிச் செல்லும்போது சிறுசிறு விஷயங்களைப் பெரிதாக்கக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

தோழமையை முன்மொழிவோம்; தேவைப்பட்டால் கையை முறிக்கவும் தெரியும்: ராஜ்நாத் சிங்

இந்தியா முதலில் பாகிஸ்தானுடன் தோழமையையே முன்மொழிந்தது. ஆனால் அந்த நாடு அதை நிராகரித்தால் கையை முறிப்பது எப்படி என்பதும் நன்கு தெரியும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இலக்கை எட்டியதால் போர் நிறுத்தம்; அழுத்தத்தால் அல்ல! ராஜ்நாத் சிங்

இந்திய ராணுவம் தனது இலக்கை முழுமையாக எட்டியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன்... மேலும் பார்க்க