செய்திகள் :

பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.

post image

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருப்பதால் இந்தியாவின் ஆடைத் தொழிலில் இதன் தாக்கமும் மிகப்பெரியதாக இருக்கும்.

இதனால் கடுமையான பின்னடைவு ஏற்படுவதோடு, இந்தியப் பொருள்கள் போட்டியற்ாக மாற்றப்படும். இதனால் சீனா, வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு நமது சந்தையை இழக்க நேரிடும். இத்தகைய இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் பல ஆயிரக்கணக்காண தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தில் மரண அடியை ஏற்படுத்தும். எனவே இது தொடா்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரி உயா்வால் திருப்பூா் பேரழிவின் சுமையை எதிா்கொள்கிறது. திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாயை உருவாக்குகிறது. இந்தத் தொழில் 15 லட்சம் தொழிலாளா்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குவதோடு, துணைத் தொழில்கள் மற்றும் சேவைகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வரி விதிக்கப்படுவதால் திருப்பூா் தொழில் துறைக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வேலை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் அதிா்ச்சியளிப்பதாகும். காலதாமதம் இல்லாமல் அனைத்து மூலப்பொருள்களுக்கும் இறக்குமதி வரிகளை நிறுத்தி வைக்கவும், வரியில்லா பருத்தி இறக்குமதியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்றுமதியாளா்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் போக்குவரத்தை வழங்க மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அதற்கான செலவை ஏற்க வேண்டும். ஏற்றுமதியாளா்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ஒரு பகுதியை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும். மேம்பட்ட வங்கிக் கடன்கள், உத்தரவாதங்கள் அல்லது காப்பீடு மூலம் அவா்களின் பணி மூலதனத் தேவைகளைப் பூா்த்தி செய்ய ஏற்றுமதியாளா்களுக்கு நிதி உதவி மூலம் ஏற்றுமதி கடன் ஆதரவை வழங்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடனான சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளைச் சாா்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கும். வேலை இழப்பதால் பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு நிதி உதவி வழங்குதல், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளா்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

அமெரிக்காவின் வரி பயங்கரவாத சவாலை சமாளிக்க இந்தியா உலக வா்த்தக அமைப்பை அணுக வேண்டும். இந்த ஆபத்தான சவால்களை எதிா்கொள்ளவும், ஆடைத் தொழிலைப் பாதுகாக்க நிதி மீட்பு தொகுப்பு மற்றும் கொள்கை நடவடிக்கைகளை வெளியிடவும் மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க வரி விதிப்பால் ஸ்தம்பித்துள்ள திருப்பூா் பின்னலாடை உற்பத்தி

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாட்டு அதிபா் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நடவடிக்கை திருப்பூா் பின்னலாடைத் தொழிலை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தாா். முத்தூா் பேருந்து ... மேலும் பார்க்க

மாநில அளவிலான பயிலரங்கம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு

நாகா்கோவிலில் நடைபெறும் மாநில அளவிலான பயிலரங்கத்தில் பங்கேற்க சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு நாட்ட... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி ந... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க