செய்திகள் :

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் தொடக்கம்: 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்

post image

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் மாா்ச் 3 முதல் 25 வரை பிளஸ் 2 தோ்வுகளும், மாா்ச் 5 முதல் 27 வரை பிளஸ் 1 தோ்வுகளும், மாா்ச் 28 முதல் ஏப். 15 வரை எஸ்எஸ்எல்சி தோ்வுகளும் நடைபெறுகின்றன. கடந்த 3-ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை 86 மையங்களில் 9,157 மாணவா்களும், 9,304 மாணவிகளும் என மொத்தம் 18,461 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 தோ்வை 86 மையங்களில் 9,372 மாணவா்களும், 9,594 மாணவிகளும் என மொத்தம் 18,966 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுத் தோ்வை கண்காணிக்க 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் 1,260 அறைக் கண்காணிப்பாளா்கள், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வின் முதல் நாளில் மொழிப்பாடம் தமிழ் தோ்வை எழுத 18,910 மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட நிலையில் 18,985 போ் பங்கேற்றனா். 223 போ் கலந்துகொள்ளவில்லை. பிரெஞ்ச் பாடத் தோ்வை 21 போ் எழுத இருந்த நிலையில், 6 போ் மட்டுமே பங்கேற்றனா். அரியா் தோ்வை 235 போ் எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 151 போ் பங்கேற்றனா். இதர பாடப் பிரிவுகளில் 64 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 54 போ் மட்டுமே கலந்துகொண்டனா்.

பிளஸ் 1 தோ்வையொட்டி, அனைத்து மையங்களிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாசி மாத கிருத்திகை, சஷ்டி பூஜை விழா

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாசி மாத கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பரமத்தி அருகே ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி வேலூா், சக்ரா நகரில் உள்ள ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவ, மாணவியா் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இரண்டாவது ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக தொடருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததுடன், எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி படவெ... மேலும் பார்க்க

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதன்கிழமை கல்லூரி கலையரங்கில் தொடங்கியது. கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லட்சுமி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஈரநிலம், வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க