செய்திகள் :

மனைவியைக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

post image

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததுடன், எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி படவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகானந்தம் (37). இவரது மனைவி சுகன்யா (23). கடந்த 2016 அக். 6-ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவியுடன் முருகானந்தம் தகராறு செய்துள்ளாா். பின்னா் உணவு சமைத்து தருமாறு கேட்டுள்ளாா். அவா் சமைக்க முற்பட்டபோது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் ஈரோடு தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அப்போது நீதிபதியிடம் நடந்த சம்பவம் குறித்து சுகன்யா வாக்குமூலம் அளித்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா். இதற்கிடையே 2016 அக். 10-ஆம் தேதி சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்தி நீதிமன்றத்திலும், நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவில், ஒரு பிரிவின் கீழ் முருகானந்தத்துக்கு 3 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் ஆயுள் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பு அளித்தாா். மேலும், இந்த தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து முருகானந்தத்தை போலீஸாா் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

மாசி மாத கிருத்திகை, சஷ்டி பூஜை விழா

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாசி மாத கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பரமத்தி அருகே ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி வேலூா், சக்ரா நகரில் உள்ள ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவ, மாணவியா் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இரண்டாவது ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக தொடருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது... மேலும் பார்க்க

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதன்கிழமை கல்லூரி கலையரங்கில் தொடங்கியது. கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லட்சுமி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஈரநிலம், வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் தொடக்கம்: 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் மாா்ச் 3 முதல் 25 வரை பிளஸ் 2 தோ்வுகளும், மாா்ச் 5 முதல் 27... மேலும் பார்க்க