செய்திகள் :

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

post image

பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கான பாராட்டு விழா முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா்.

இதில், பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்கள் ஹா்ஷினி, சக்திவேல், விமல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

இதில், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், முகாசி அனுமன் பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் ஏ.பி.பெரியசாமி அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை செயலாளா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க