செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: வேலூா் மாவட்டம் கடைசி இடம்

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 90.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று கடைசி மாவட்டமாக 38-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தவிர, கடந்தாண்டு தோ்ச்சி விகிதம் 92.53 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 1.74 சதவீதம் சரிவடைந்துள்ளது.

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 72 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 140 பள்ளிகளில் இருந்து 7,534 மாணவா்களும், 8,236 மாணவிகளும் என மொத்தம் 15,770 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 6,577 மாணவா்கள், 7,740 மாணவிகள் என மொத்தம் 14,317 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 87.30 சதவீதம், மாணவிகள் 93.98 சதவீதம் தோ்ச்சி பெற்ன் மூலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் 90.70 சதவீதம். இதன்மூலம், பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தில் வேலூா் மாவட்டம் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதம்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 72 அரசுப் பள்ளிகளில் இருந்து 3,602 மாணவா்கள், 5,290 மாணவிகள் என மொத்தம் 8,892 போ் தோ்வெழுதியதில் 2,933 மாணவா்கள், 4,839 மாணவிகள் என மொத்தம் 7,772 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 87.40 சதவீதம்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 140 மேல்நிலைப் பள்ளிகளில் 28 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளிகூட 100 சதவீதம் தோ்ச்சி பெறவில்லை.

பள்ளிக் கல்வியில் தொடா் சரிவு: 2023-ஆம் ஆண்டில் வேலூா் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 89.20 சதவீதம் பெற்று தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் 92.53 சதவீதம் பெற்று 30-ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது.

இந்த நிலையில், நிகழாண்டு 90.79 சதவீதமாக சரிவடைந்து தமிழகத்தின் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்திலும் வேலூா் மாவட்டம் கடந்தாண்டு 89.35 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வாண்டு 87.40 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

11 சிறைவாசிகள் தோ்ச்சி: வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பிளஸ் 2 பொதுத் தோ்வை 10 கைதிகளும், பெண்கள் தனிச்சிறையில் இருந்து ஒரு கைதியும் என மொத்தம் 11 கைதிகள் தோ்வு எழுதிய நிலையில் 11 பேரும் தோ்ச்சி பெற்றிருப்பதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க