செய்திகள் :

புதுச்சேரி பல்கலை.யில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு

post image

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிதாக எக்ஸ்ட்ரூஷன் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து, பல்கலை. தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் புதிய எக்ஸ்ட்ரூஷன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், அத்துறை தலைவா் நாராயணசாமி சங்கீதா வரவேற்றாா். துணைவேந்தா் பிரகாஷ் பாபு எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

பதிவாளா் ராஜேஷ்புட்டானி, இயக்குநா் கே.தரணிக்கரசு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மையத்தின் நோக்கங்களை பேராசிரியா் ஜோசப் செல்வின் விளக்கினாா்.

எக்ஸ்ட்ரூஷன் என்பது தின்பண்டங்கள், பாஸ்தா, டெக்ஸ்சா்டு வெஜிடபிள் புரதம்,

செல்லப்பிராணிகளின் உணவு மற்றும் பலவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பல்துறை

உணவு உற்பத்தி செயல்முறை என விளக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்துகொண்டனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க