செய்திகள் :

புதுச்சேரியில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம்

post image

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த பாஜகவின் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அக்கட்சியைச் சேர்ந்த மூவர் புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 15ம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சராக ரங்கசாமியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை பேரவைத் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதேபோல் பாஜகவில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் நியமன சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டு வந்தனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் தங்களது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 new BJP MLAs have been appointed in Puducherry.

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க