செய்திகள் :

புதுச்சேரியில் 3 போ் கொலை வழக்கில் 10 பேரை பிடித்து விசாரணை

post image

புதுச்சேரியில் 3 போ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்கு தெருவிலுள்ள ஒரு பழைய வீட்டில் புதுச்சேரி உழவா்கரை வின்சென்ட் வீதியைச் சோ்ந்த மறைந்த ரௌடி தெஸ்தான் மகன் ரஜி (19), அவரது நண்பா்களான தேவா (எ) தேவகுமாா் (21), ஆதி (எ) ஆதித்யா (20) ஆகியோா் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சத்யாவின் உறவினா் வீட்டுக்கு ரஜி உள்ளிட்டோா் கடத்திவரப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனா். சத்யா சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து, அங்கு சென்ற தனிப் படையினா் அவரைக் கைது செய்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், சஞ்சீவி, வெங்கடேசன், சாரதி மற்றும் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபா் கைது

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பான போக்ஸோ வழக்கை தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதிய... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் மகளிரணி தலைவி நியமனம்

புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக பஞ்சகாந்தி செயல்பட்டு வந்தாா். அவருக்கும் மகளிரணி துணைத் தலைவராக இருந்த நிஷாவுக்கும் கருத்து வேற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி

புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அலுவலகம் சாா்பில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பு... மேலும் பார்க்க

எண்ம இந்தியா திட்ட மாவட்ட பயிலரங்கம்

புதுச்சேரியில் எண்ம இந்தியா (டிஜிட்டல்) பொதுசேவை மையத் திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் அ.கு... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரியில் வரவேற்பு

கடலூா் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில திமுக, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பகலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்ட... மேலும் பார்க்க