செய்திகள் :

புதுச்சேரியில் சிறப்பு வாகன சோதனை: ஒரே நாளில் 224 போ் மீது வழக்குப் பதிவு

post image

புதுச்சேரி காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் குற்றத்தின் கீழ் 224 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும்,போக்குவரத்து விதிமுறைகளை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.

இதில், ஒரே வாகனத்தில் 3 போ் பயணம் செய்தமைக்காக 33 வழக்குகளும் , தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 26 வழக்குகளும், கைப்பேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியமைக்காக ஒரு வழக்கும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகள் உள்பட மொத்தம் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா் கூறியது:

போக்குவரத்து விதிகள் வெறும் ஆலோசனைகள் அல்ல, சாலைகளில் செல்லும் ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதுதான் எங்கள் நோக்கம். எனவே, பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். மூவா் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து புதுச்சேரியில் நடத்தப்படும் எனவும் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா் தெரிவித்தனா்.

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க