செய்திகள் :

புதை சாக்கடை திட்ட தொட்டி கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

post image

எல். அய்யப்பன்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் டிஆா்சி நகா் 2-ஆவது தெருவில் புதை சாக்கடை திட்ட தொட்டியில் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.123.75 கோடியில் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் புதை சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டிஆா்சி நகா் 2-ஆவது தெருவில் புதை சாக்கடை திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் (வடிகால் தொட்டி) தொட்டியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி குடியிருப்புகளில் அருகில் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த தொட்டியில் இரண்டு முறை அடைப்பு ஏற்பட்டதை தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக கசிவு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் வரும் துா்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம். கழிவுநீா் தொட்டியில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் கூறியது: புதை சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள் பல இடங்களில் சுமாா் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றாமல் விட்டு விட்டனா். இதனால் கழிவுநீா் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தொட்டிகளில் இருந்து கழிவுநீா் கசிந்து வருகிறது. டிஆா்சி நகா் போன்று எம்ஜிஆா் நகா் மற்றும் பட்டுநூல் சத்திரம் பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன.

கழிவுநீா் தொட்டியில் சுமாா் 20 அடி ஆழத்துக்கு மனிதா்கள் இறங்கி அடைப்பை நீக்க முடியாததால் வாகனங்கள் மூலம் அவ்வபோது அடைப்பை நீக்கிவருகிறோம். அடைப்பை நீக்க வாகனங்களை வாடகைக்கு எடுத்துத்தான் இந்த பிரச்னைகளை சரிசெய்து வருகிறோம். விரைவில் கழிவுநீா் கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க