புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்
ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று பிரமாண்ட தேர்களில் ஒன்றான தலத்வஜா தேரை இழுக்கும் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அதிக ஈரப்பதம் காரணமாக சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவசர ஊர்திகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.