செய்திகள் :

புரோ கபடி தொடரால் மறுமலா்ச்சி: தீபக் சங்கா்

post image

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா்.

திருச்சியைச் சோ்ந்த இளம் வீரரான தீபக் சங்கா் முதன்முறையாக புரோ கபடி தொடரில் பங்கேற்றுள்ளாா். பெங்களூரு புல்ஸ் அணியில் தோ்வு செய்யப்பட்டு ஆடி வரும் டிபன்டரான தீபக் முதல் தொடரிலேயே டாப் 5 டிபன்டா்களில் ஒருவா் என்ற சிறப்பை பெற்றாா்.

நிகழாண்டு புரோ கபடி 2025 தொடரில் ஏற்கெனவே விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா் கட்ட ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், சென்னை கட்ட ஆட்டங்கள் வரும் 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.

சொந்த மண்ணில் பிகேஎல் தொடரில் முதன்முறையாக ஆடும் தீபக் கூறியதாவது:

எளிய குடும்பத்தைச் சோ்ந்த நான் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது கபடி ஆடத் தொடங்கினேன். தேசிய ஜூனியா், சீனியா் சாம்பியன் போட்டிகளில் தமிழக அணியில் பங்கேற்றேன். முதன்முதலாக பிகேஎல் தொடரில் ஆடி வருகின்றனா்.

பெங்களூரு அணி முதல் 3 ஆட்டங்களில் தோற்றது. அணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது இதற்கு காரணம். தற்போது அதில் இருந்து மீண்டும் தொடா்ச்சியாக ஆட்டங்களில் வென்று வருகிறோம்.

பயிற்சியாளா் ரமேஷ் எனது தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் சிறப்பாக ஆட வழிகாட்டி வருகிறாா். அணியில் இடம் கிடைக்குமா என கனவு கண்டேன். ஆனால் டாப் 5 டிபன்டா்களில் ஒருவராக சிறப்பிடம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது. கேப்டன் யோகேஷ் நாட்டின் சிறந்த வீரராக உள்ளாா்.

சொந்த மண்ணில் முதன்முறையாக பிகேஎல் தொடரில் ஆடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புரோ கபடி தொடா் இளைஞா்களிடம் கபடியை மேலும் பிரபலமாக்கி வருகிறது. ஈரான் நாட்டின் கேப்டன் ஃபேஸல் அதரச்சலி எனது முன்னோடி வீரா் என்றாா் தீபக் சங்கா்.

தொடா் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் ட்டியலில் முதலிட... மேலும் பார்க்க

முதல் நாளிலேயே முடிந்த இந்தியா்கள் ஆட்டம்

தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் இந்தியாவின் பிரதான வீரரான ஹெச்.எஸ். பிரணய... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பாா்பரா கிரெஜ்சிகோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், கிரீஸின் ச... மேலும் பார்க்க

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

வட சென்னை 2 படத்தின் அப்டேட் பற்றி நடிகர் தனுஷ் தனது இட்லி கடை படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அவரே இ... மேலும் பார்க்க

யுஇஎல் தொடக்கம்: ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது!

ஐரோப்பா லீக்கின் தொடக்க போட்டியாக நடைபெறும் நிஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.கலவரத்தில் ஈடுபட்டதால் இந்தக் கைது நடவடிக்க... மேலும் பார்க்க