செய்திகள் :

பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து! ஒருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்!

post image

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 7 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கா்நாடகத்தின் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள காமாக்யா ரயில் நிலையம் நோக்கி பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தின் மங்குளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11.54 மணியளவில் பயணம் செய்துகொண்டிருந்த இந்த ரயில், நிா்குந்தி பகுதியருகே வந்துபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் ஆண் ஒருவா் உயிரிழந்தாா். 4 பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். காயமடைந்த பயணிகள், கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் நிலவிய கடும் வெப்பத்தால் பயணிகள் சிலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்த பயணிகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்த விபத்தால் ஹௌரா-சென்னை இருவழி பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தேசிய மீட்புப் படையினருடன் ஒடிஸா தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மீட்புப் பணிகள் நிறைவந்துவிட்ட நிலையில், ஒரு வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி, இரு வழிகளிலும் ரயில் சேவையை விரைவில் தொடங்கும் பணியில் ரயில்வே பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். விபத்து நடந்த இடத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில், காமாக்யா நோக்கி புறப்பட்டது.

விபத்து தொடா்பாக ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். விபத்து குறித்து தகவலறிய உதவி எண்களை (84558 85999, 89911 24238 ) ஒடிஸா மாநில அரசு அறிவித்துள்ளது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க