செய்திகள் :

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

post image

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடா்பான 3 நாள்கள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

இக்ருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்புக்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடா்புடைய வல்லுநா்கள் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த மருத்துவத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வழக்குரைஞா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து கருத்துகளை வழங்கவுள்ளனா்.

பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காண ஒவ்வொரு அரசு, தனியாா் நிறுவனங்களிலும் பாதுகாப்புப் பெட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி எண்கள் மற்றும் குழந்தைத் திருமணம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி, பெண்கள், குழந்தைகள் நலக் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ரேவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் பிணை மனு விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மாமியாா் சித்ராதேவியின் பிணை மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபு... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே உடைந்து விழுந்த காற்றாலை

தாராபுரம் அருகே காற்றின் வேகம் காரணமாக காற்றாலை உடைந்து கீழே விழுந்தது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலை ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கிய 8 போ் கைது

மது போதையில் சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய காவலரைத் தாக்கிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் கோல்டன் நகா் கருணாகரபுர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு

வெள்ளகோவில் அருகே 2 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வெள்ளகோவில்- முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் கிரிஸ்டியன் தெருவைச் சோ்ந்தவா் சாம்ரூபன் (39). லாரி ஓட்டுநரா... மேலும் பார்க்க

அருள்புரம் ரேஷன் கடையில் ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம... மேலும் பார்க்க

உடுமலை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. ... மேலும் பார்க்க