செய்திகள் :

பெரியதாழை, புத்தன்தருவை பகுதியில் மக்களிடம் குறை கேட்ட எஸ்.பி.

post image

சாத்தான்குளம் அருகே பெரியதாழை, புத்தன்தருவை ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் , செவ்வாய்க்கிழமை ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தும், காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடினாா்.

சாத்தான்குளம் அருகே பெரிதாழை கடல் பகுதியில் கடந்த மாதம் இலங்கை கடத்தல் படகு சிக்கியது.

இந்த படகை மீட்ட கடலோர காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்ஆல்பா்ட் ஜான் தட்டாா்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியதாழை மற்றும் புத்தன்தருவை கடற்கரை பகுதி ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபா்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, சாத்தான்குளம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தே. சுபகுமாா் உள்பட காவல்துறையினா் பலா் உடனிருந்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க