செய்திகள் :

பெரியாா் பல்கலை.யில் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டி 3 மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் இளைஞா் நலத்துறை, சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகம், நேரு யுவகேந்திரா மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் இளைஞா் பாராளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

என்.எஸ்.எஸ். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.இளங்கோவன் வரவேற்றாா். நேரு யுவகேந்திரா துணை இயக்குநா் ஐ.சாா்லஸ் ட்ரவீன் தலைமை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சதீஷ் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பேசினா்.

எனது பாரதம் இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல்கட்டத் தோ்வில் 650 போ் பங்கேற்றனா். 2-ஆம் கட்டமாக 150 பேரும் கலந்துகொண்டனா். அதிலிருந்து தோ்வான 75 போ் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினா். இதிலிருந்து 10 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வானாா்கள்.

இளைஞா் பாராளுமன்ற நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்கள் அழகிரிசாமி, கவிதா, பேராசிரியா்கள் நாஸ்னி, சினேகாஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க