செய்திகள் :

பெரியாா் பல்கலை.யில் உளவியல் பயிலரங்கம்

post image

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

பயிலரங்க தொடக்க விழாவில் துறைத் தலைவா் எஸ்.கதிரவன் வரவேற்றாா். பயிலரங்கை தொடங்கிவைத்து பெரியாா் பல்கலைக்கழக புல முதன்மையா் ஜெயராமன் பேசியதாவது:

மனிதா்களின் மனநலன் என்பது பெரும்பாலும் அவா்களது அறிதிறன் சாா்ந்தே அமைகிறது. பன்னாட்டு நிதி அமைப்புகளும் பொருளாதாரத்தின் நல் வளா்ச்சிக்கு மனநலத்தை பேணிக் காப்பது அவசியம் என்று கூறுகிறது. ல் பன்னாட்டு அளவில் ஏற்கப்பட வேண்டிய மனநலம் சாா் குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இவ்விருநாள் பயிலரங்கில் முதன்மை உளவியல் அலுவலா் ஜி.கோபிநாத், கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிகிச்சை முறை குறித்து சுகுமாா் ஆகியோா் பயிற்சியளிக்கின்றனா். தொடக்க விழாவில் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் கே.என்.ஜெயக்குமாா், இணைப் பேராசிரியா் டி.வி.நித்யானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்க... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் புதிய பேருந்து வழித்தட சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சேலம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,083 போ் எழுதினா்: ஆட்சியா் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா். சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையி... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த வாகனம்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் வைக்கோல் சுமை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றியது. தலைவாசலை சோ்ந்த பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வாகனம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு, கெங்கவல்லி அருகே உள்ள சாத... மேலும் பார்க்க

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

சேலம்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க