செய்திகள் :

பேரளத்தில் யோகாசன சாம்பியன்ஷிப்

post image

தமிழ்நாடு புதுச்சேரி மாநில அளவிலான யோகாசன ஓபன் சாம்பியன்ஷிப் 2025 க்கான போட்டி பேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இறைஒளி யோகா பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் தமிழகம், காரைக்கால் மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

வயதின் அடிப்படையில் எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்குப் பரிசுகளை வேலூா் மாவட்ட காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளா் ஆா் . ஸ்ரீகாந்த் வழங்கினாா். யோகா பன்னாட்டு பயிற்சியாளா் ஆா் சணல்குமாா், டாக்டா் ஆா். ரஞ்சனிதேவி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

யோகா மாஸ்டா் ஜி.டி .கபிலன், தனியாா் பள்ளித் தாளாளா் வி. கபிலன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வி. சங்கா் நன்றி கூறினாா். பேரளம் இறைஒளி யோகா பயிற்சி மைய நிறுவனா் யு. ஆனந்த் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க