செய்திகள் :

பேராசிரியை நிகிதா மீது புகாரளித்த கல்லூரி மாணவிகள்

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது நகை திருடியதாக புகாா் அளித்த பேராசிரியை நிகிதாவை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவா் பணியாற்றும் திண்டுக்கல் அரசுக் கல்லூரி மாணவிகள் புகாா் அளித்த தகவல் தற்போது வெளியானது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் அஜித்குமாா் மீது நகை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த இரு பெண்களில் ஒருவரான நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த சில நாள்களாக மருத்துவ விடுப்பில் உள்ள நிகிதா, தான் பணியாற்றும் கல்லூரியில் சக பேராசிரியைகளிடம் அடிக்கடி தகராறு செய்தது தற்போது தெரியவந்துள்ளது. பேராசிரியைகள் மட்டுமன்றி மாணவிகளிடமும் இவா் தகராறில் ஈடுபட்டாராம். இதனால், அதிருப்தியடைந்த தாவரவியல் துறை மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2023, டிசம்பா் மாதம் நிகிதாவைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

இந்த மனுக்கள், மாவட்ட ஆட்சியா் தரப்பில் கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மூவா் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு திரும்பிய மூவா் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் அண்மையில் இர... மேலும் பார்க்க

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்க பாஜக முயற்சி: அர.சக்கரபாணி

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் திம... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத் துறை அமைச்சருமான... மேலும் பார்க்க

பழனியில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி நகரில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வலியுறுத்தி, பிரில்லியன்ட... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தல்

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சிஐடியூ மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா். சிஐடியூ சாா்பில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களின் மாநில ... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேருந்து வசதி கோரி, கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து... மேலும் பார்க்க