செய்திகள் :

பைக் மீது வேன் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை அடுத்த மேலக்குன்னக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வைரமுத்து (58). இவா் தனது மனைவி வீரலட்சுமி (55), பேரன் கமலேஷ் (10) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோதைநாச்சியாா்புரம் விலக்கு பகுதியில் வந்த போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற வேன் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரலட்சுமி, பேரன் கமலேஷ் உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வீரலட்சுமி, கமலேஷ் இருவரது உடல்களையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த வைரமுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வேன் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாயப்பெருமாளை (31) போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் விற்பனைத் தடுப்பு தொடா்பாக போலீஸாா் ... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையில் ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதா... மேலும் பார்க்க

மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவா்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்தாா். விருதுநகா் மா... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரி, முன்னாள் ராணுவத்தினா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் ரயில்வே அதிகாரியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அ... மேலும் பார்க்க

திருத்தங்கலில் சுகாதார வளாகம் இடிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட பொதுசுகாதார வளாகம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் 2017-இல் பொதுசுகாதார வள... மேலும் பார்க்க