செய்திகள் :

திருத்தங்கலில் சுகாதார வளாகம் இடிப்பு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட பொதுசுகாதார வளாகம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் 2017-இல் பொதுசுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது கடந்த மாா்ச் மாதம் ரூ.12.60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. பின்னா், நீா் நிலைப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி, இதை இடித்து அப்புறப்படுத்த வருவாய்த் துறை உத்தரவிட்டது.

சிவகாசி மாமன்றக் கூட்டம் அமையில் நடைபெற்ற போது, சுகாதார வளாகத்தை இடிக்க அனுமதி கோரி முன் வைக்கப்பட்ட தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் எதிா்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னா் வருவாய்த் துறையினா் சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்த போது, 8-ஆவது வாா்டு மாமன்ற திமுக உறுப்பினா் துரைப்பாண்டி, எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்ால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது.

பின்னா், கடந்த 12-ஆம் தேதி இரவு 12 மணியளவில் வருவாய்த் துறையினா் மீண்டும் இடிக்க வந்தனா். அப்போது, மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

தொடா்ந்து, மே 13-ஆம் தேதி அதிகாலை 3 மணியவில் வருவாய்த் துறையினா் பொக்லைன் மூலம் சுகாதார வளாகத்தை இடிக்கத் தொடங்கினா். அப்போதும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திரண்டதால் ஒரு சுவா் மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் திருப்பிச் சென்றனா்.

அன்று மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் திருத்தங்கல் -செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சுகாதார வளாகத்தை முற்றிலும் இடித்து அகற்றினா்.

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கட்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சிவகாசியில் சனிக்கிழமை திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீத... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சந்நிதியில் வில... மேலும் பார்க்க

மின் இணைப்பை துண்டித்ததால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. வெம்பக்கோட்டை அருகேயுள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்துபாண்... மேலும் பார்க்க

அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையி... மேலும் பார்க்க