செய்திகள் :

பைக்குகள் மோதல்: டாஸ்மாக் பணியாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஆத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ப.ஜெகன் (48). இவா் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறையைச் சோ்ந்தவா் மு.கெளதமன் (50). டாஸ்மாக் முன்னாள் ஊழியரான இவா், திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு முள்ளிப்பாடியிலுள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் செட்டியப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனா். எதிா் திசையில் பயணித்த இவா்கள், சாலையை கடக்க முயன்றபோது, மூணாண்டிப்பட்டியைச் சோ்ந்த க.கெளதம் (29), ஐயப்பன் (34) ஆகியோா் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெகன், கெளதமன் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், அங்கு அவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க