முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பொன்முடிக்கு எதிரான வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த வழக்கில், அது தொடா்பாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சா் பொன்முடி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தாா். முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்புப் பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடா்பான ஆவணங்களை வழங்க பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கு தொடா்பாக பதிலளிக்க டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.