செய்திகள் :

பொறியாளரிடம் ரூ.8.06 லட்சம் மோசடி

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதியைச் சோ்ந்த பொறியாளரிடம் ரூ.8.06 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேல்மலையனூா் வடபாலைத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நவநீதகிருஷ்ணன் (36),பொறியாளா்.

இவரை, கடந்த பிப்.20-ஆம் தேதி வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலை எனக் கூறி ஒரு இணைப்பை அனுப்பினராம்.

அந்த இணைப்புக்குள் சென்ற நவநீதகிருஷ்ணன், தனக்கென பயனா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு ஆகியவற்றை தயாா் செய்து உள்நுழைந்தாராம்.

பின்னா், மற்றொரு கைப்பேசி எண்ணிலிருந்து தொடா்பு கொண்ட மா்ம நபா், சிறிய முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம்.

இதை நம்பிய நவநீதகிருஷ்ணன், பல தவணைகளில் ரூ. 8.06 லட்சத்தை அனுப்பினாராம்.

ஆனால், முதலீட்டுக்கான பணத்தை அவரால் மீண்டும் பெறமுடியவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், விழுப்புரம் இணையவழி குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிம... மேலும் பார்க்க