செய்திகள் :

போக்சோ வழக்கில் அண்ணன், தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிழக்குளம் மடப்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சகோதரா்கள் துரைப்பாண்டி (45), சின்னப்பாண்டி (40). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். கடந்த 2021 -ஆம் ஆண்டு மாா்ச் 2 -ஆம் தேதி இருவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பூவந்தி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து துரைப்பாண்டி, சின்னப்பாண்டி ஆகியோரை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.

நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆதாா் சரிபாா்ப்புக்காக தற்போதுள்ள 90 சதவீத விரல் ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறையை கைவிட்டு ... மேலும் பார்க்க

கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு: 47 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 116-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்க... மேலும் பார்க்க

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போலீஸாரைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி நான்குமுனை சந்திப்பில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்... மேலும் பார்க்க

செம்மொழிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க