செய்திகள் :

நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆதாா் சரிபாா்ப்புக்காக தற்போதுள்ள 90 சதவீத விரல் ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறையை கைவிட்டு ஏற்கெனவே 40 சதவீத ரேகைப் பதிவு இருந்தால் போதுமானது என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கெனவே நிலுவையிலுள்ள 30 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி நிறைவேற்ற முன் வரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 22, 23, 24-ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஏப். 22-இல் வட்ட அளவிலும், ஏப். 23-இல் கோட்ட அளவிலும், ஏப். 24-இல் மாவட்ட அளவிலும் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் கே.பி. விஸ்வநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால் வருகிற 28-ஆம் தேதி மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மண்டல தலைமையிடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

இதில், சிவகங்கை மாவட்டத் தலைவா் எஸ்.எம். மாயாண்டி, மாவட்டச் செயலா் திருஞானம், மாவட்டப் பொருளாளா் கௌரி, இளையான்குடி வட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், வட்ட நிா்வாகிகள் சாந்தி, வசந்தி, ரேவதி, சோபனா, வனிதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டம் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 850 நியாய விலைக் கடைகளில் 470 நியாய விலைக் கடைகள் இயங்க வில்லை என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

போக்சோ வழக்கில் அண்ணன், தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிழக்க... மேலும் பார்க்க

கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு: 47 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 116-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்க... மேலும் பார்க்க

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போலீஸாரைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி நான்குமுனை சந்திப்பில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்... மேலும் பார்க்க

செம்மொழிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க